கடத்தூர் அரசு பள்ளியில் கபடி போட்டி

2 months ago 10

 

கடத்தூர், நவ.5: கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. போட்டிகளை பச்சையப்பன், சபரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கடத்தூர் பிஆர்கேசி அணி முதலிடம் பெற்று பரிசு கோப்பையை வென்றது.

அரூர் பிரண்ட்ஸ் ஃபவர் அணி 2ம் இடமும், கடத்தூர் தினா வேலு கபடி குழு 3ம் இடத்தையும், கிருஷ்ணகிரி விநாயகா கபடி குழு 4ம் இடத்தை வென்று பரிசு கோப்பைகளை வென்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஹோலி கிராஸ் பாரா மெடிக்கல் இன்ஸ்டியூட் நிறுவனர் ரவிக்குமார் பரிசு வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை வேலு கபடிகுழுவினர் செய்திருந்தனர்.

The post கடத்தூர் அரசு பள்ளியில் கபடி போட்டி appeared first on Dinakaran.

Read Entire Article