கஞ்சா விற்ற வழக்கில் திருநங்கை கைது

2 months ago 10

துரைப்பாக்கம்: சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே தனுஷ், கிஷோர் குமார், அஸ்வின், ஜெயப்பிரகாஷ், மேலும் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் அண்ணாநகர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த சஞ்சனா (30) என்ற திருநங்கை தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். இவரை தலைமைச் செயலக காலனி போலீசார் நேற்று பிடித்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே 8 குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

The post கஞ்சா விற்ற வழக்கில் திருநங்கை கைது appeared first on Dinakaran.

Read Entire Article