கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது

4 months ago 12

 

மேட்டூர், ஜன. 6: கொளத்தூர் அருகே, காவேரிபுரம் சத்யா நகரைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் பிரகாஷ் (20). கடந்த டிசம்பர் 8ம் தேதி, கஞ்சா கடத்தி வந்த போது, கொளத்தூர் போலீசாரால் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஈரோடு மாவட்ட போலீசில் கஞ்சா கடத்தல் வழக்கு உள்ளது. தொடர்ந்து கஞ்சா கடத்தல் ஈடுபட்டு வந்து, பொது ஒழுங்கு மற்றும் சுகாதார பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், இவரை ஓராண்டு தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், மாவட்ட எஸ்பி கௌதம் கோயலுக்கு பரிந்துரை செய்தார். சேலம் மாவட்ட எஸ்பி, மற்றும் கலெக்டரின் உத்தரவின் பேரில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கஞ்சா வியாபாரி பிரகாஷ் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கஞ்சா வியாபாரி மீது குண்டாஸ் பாய்ந்தது appeared first on Dinakaran.

Read Entire Article