கங்கைகொண்டானில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

6 hours ago 1

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கங்கைகொண்டான் ரேசன் கடை அருகே சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒடிசா மாநிலம், பாலேசோர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ்பாரிக் (வயது 24), பிபூதிபூசன்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 30 கிராம் கஞ்சாவை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மேற்சொன்ன 2 பேரையும் கங்கைகொண்டான் காவல் நிலையம் அழைத்துச் சென்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பிரகாஷ்பாரிக், பிபூதிபூசன் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்தார்.

Read Entire Article