ஓடும் காரில் பயங்கர தீ: சிஆர்பிஎப் அதிகாரி தப்பினார்

1 day ago 4


திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் ரத்னம். சிஆர்பிஎப்பில் உதவி கமாண்டன்ட் அதிகாரியாக உள்ளார். இவர் நேற்று பணி காரணமாக ராஜமுந்திரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். கிழக்கு கோதாவரி மாவட்டம், வீரவள்ளி டோல்பிளாசா அருகே சென்றபோது இவரது காரின் முன்பகுதி தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ரத்னம் உடனடியாக காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதனால் அவர் எவ்வித காயமின்றி தப்பினார்.

இதைபார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென கார் முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து சேதமானது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓடும் காரில் பயங்கர தீ: சிஆர்பிஎப் அதிகாரி தப்பினார் appeared first on Dinakaran.

Read Entire Article