ஓசூர் சம்பவம்: வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு அரசிடம் பரிந்துரைகள் அளிக்க பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

3 months ago 15

சென்னை: ஓசூர் சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒசூரில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

Read Entire Article