டெல்லி : மாநிலங்கள் வளர்ந்தால் நாடு வளர்ச்சி அடையும்; ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்த மாநிலமாக உருவானால், நாடு வளர்ந்த நாடாக வலிமை பெறும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், “ஒவ்வொரு மாநிலத்திலும் சர்வதேச தரத்தில் ஒரு சுற்றுலா மையம் அமைக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்; மத்திய அரசுடன் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; மத்திய, மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்த மாநிலமாக உருவானால், நாடு வளர்ந்த நாடாக வலிமை பெறும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.