சென்னை: “எம்எல்ஏ.க்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் நிறைய தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள். இருப்பினும் ஒவ்வொரு தொகுதியிலும் 2 தடுப்பணைகளாவது கட்ட வேண்டும் என்று அரசு நினைக்கிறது. நிதி நிலை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பணைகள் கட்டப்படும்” என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 18) கிணத்துக்கடவு எம்எல்ஏ செ.தாமோதரன் பேசுகையில், “கிணத்துக்கடவு தொகுதி, மதுக்கரை ஒன்றியம், திருமலையம்பாளையம் பேரூராட்சி, வழுக்கல் கிராமத்தில் உள்ள தடுப்பணையைச் சீரமைக்க அரசு முன் வருமா?” என்று கேட்டார். அதையடுத்து பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, காங்கிரஸ் எம்எல்ஏ. ராஜேஷ்குமார், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் துணைக் கேள்விகள் கேட்டனர்.