ஒரே ஆண்டில் சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் வருவாய் ரூ.139 கோடியாக அதிகரிப்பு: அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறுவப்படுமா?

2 weeks ago 3

மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைமைமருத்​துவ​மனை​களி​லும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி ஏற்படுத்தவேண்​டும் என 2017-ல் பொதுநல வழக்கு ஒன்றில் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்​பித்​திருந்​தது. ஆனாலும், அனைத்து அரசுமருத்​துவ​மனை​களி​லும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதிஇதுவரை ஏற்படுத்​தப்​பட​வில்லை.

அரசு மருத்​துவ​மனை​களில் சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்​திரங்களை நிறுவி, அவற்​றைச் செயல்​படுத்​தும் பணிகளை தமிழ்​நாடு மருத்துவ சேவைக் கழகம் நிர்​வகித்து வருகிறது. அரசு மருத்​துவ​மனை​களில் இதுவரை 133 சிடி ஸ்கேன், 42 எம்ஆர்ஐ ஸ்கேன்கள் நிறு​வப்​பட்​டுள்ளன. சிடி ஸ்கேன் எடுக்க ரூ.500, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க ரூ.2,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மக்கள் இந்த இருஸ்கேன்​களை​யும் மருத்​துவக்காப்​பீடு மூலம் எடுக்க நடைமுறைச் சிக்கல் உள்ள​தால், பலரும் பணம் செலுத்​தியே ஸ்கேன் எடுக்​கின்​றனர்.

Read Entire Article