கறம்பக்குடி, பிப்.6: கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தீத்தாணிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா, விவசாயி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்றபோது அருகில் உள்ள கிணற்றுக்குள் விழுந்து விட்டது. கிணற்றுக்குள் விழுந்த ஆடு கத்தி கொண்டிருந்ததை பார்த்த உறவினர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் சிறை சீலன் தலைமை யில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
The post கறம்பக்குடி அருகே கிணற்றுக்குள் விழுந்த ஆடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.