“ஒரே ஆண்டில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி!” - எல்.முருகன் பெருமிதம்

3 months ago 15

சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 12 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 10 லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக பணியில் இணைந்துள்ளனர் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் ரோஜ்கர் மேளா எனும் வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். நாடு முழுவதும் 40 இடங்களில் நடைபெற்ற விழாக்களில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.

Read Entire Article