ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி... இறங்கி வருகிறாரா இபிஎஸ்?

7 months ago 24

“ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. “பாஜகவுடன் இனி ஒட்டுமில்லை உறவுமில்லை” என்று அறிவித்து அந்தக் கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறினார் பழனிசாமி. அது முதலே அதிமுகவினர் பாஜகவை பரம வைரியாகவே பார்த்து வருகிறார்கள். அதேபோல் பாஜக தரப்பிலும் சிலர் அதிமுகவை சமயம் கிடைக்கும் போதெல்லாம் வசைபாடி வருகிறார்கள். இந்த நிலையில் தான் அதிரடி திருப்பமாக பழனிசாமியின் கூட்டணி குறித்த பேச்சு அமைந்திருக்கிறது.

கடந்த 10-ம் தேதி திருச்​சியில் செய்தி​யாளர்களை சந்தித்த பழனிசாமி​யிடம், பாமக, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைப்​பீர்களா என்று கேட்டதற்கு, “ஒருமித்த கருத்​துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்​கப்​படும்” என்று பதில் சொன்னார். இதனால், மீண்டும் பாஜக பக்கம் சாய்கிறாரா பழனிசாமி என்கிற கேள்வி தமிழக அரசியலில் பெரிதாக எழுந்​துள்ளது.

Read Entire Article