ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்க திட்டம்: தமிழக பட்ஜெட் 2025 சிறப்பம்சங்கள் என்ன?

3 hours ago 1

சட்டப்பேரவையில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். வரும் 5 ஆண்டுகளில் 1 லட்சம் மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்து ஆவணங்களுக்கு பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். 9 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

வரும் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். காலை 9.30 மணிக்கு பட்ஜெட் உரையை தொடங்கிய அவர் 12.10 மணிக்கு நிறைவு செய்தார். பட்ஜெட் உரையில் அவர் தெரிவித்ததாவது:

Read Entire Article