ஒரத்தநாடு பைபாசில் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு

2 months ago 10

 

ஒரத்தநாடு, டிச. 18: ஒரத்தநாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மீன் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தஞ்சை, பட்டுக்கோட்டை ஒரத்தநாடு கடைத்தெரு வழியாக செல்லும் வழியாக செல்லும் புறவழிசாலை ஓரத்தில் மீன் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.

இதனால், அந்த வழியாக செல்வோர் மற்றும் நடைப்பயிற்சி செல்வோர் கடுமையாகப் பாதிக்கின்றனர். மேலும், கனமழை காரணமாக கழிவுகள் நீரில் கலந்து குலம் மற்றும் சாக்கடைகளில் கலப்பதால் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post ஒரத்தநாடு பைபாசில் இறைச்சி கழிவுகளால் சீர்கேடு appeared first on Dinakaran.

Read Entire Article