ஒன்றிய அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: யோகா ஆசிரியர் கைது

2 months ago 6

கோவை: கோவை வடவள்ளி அடுத்த கோல்டன் நகரை சேர்ந்தவர் ராஜன் (54). இவர், ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒன்றிய அரசு பள்ளியில் ஓவியம் மற்றும் யோகா ஆசிரியராக உள்ளார். இவர், பயிற்சிக்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி அடைந்த அந்த மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் அளித்தனர். அவர் விசாரித்ததில் யோகா ஆசிரியர் ராஜன் ஏற்கனவே பல மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர், கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் போக்சோ வழக்கு பதிந்து யோகா ஆசிரியர் ராஜனை கைது செய்தனர்.

The post ஒன்றிய அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: யோகா ஆசிரியர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article