ஒன்றிய அரசு சார்பில் பிறப்பு, இறப்பு பதிவுக்கான மொபைல் செயலி அறிமுகம்

3 months ago 13

புதுடெல்லி: இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையரால் தயாரிக்கப்பட்ட சிவில் பதிவு அமைப்பு (CRS) மொபைல் செயலியை நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். இந்த செயலி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை ஆன்லைன் மூலம் செய்யலாம். இதுகுறித்து அமித்ஷா கூறுகையில்,’ சிவில் பதிவு முறை மொபைல் செயலி மூலம் குடிமக்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருந்து பதிவு செய்ய அனுமதிப்பதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்புகளை தடையின்றி மற்றும் தொந்தரவு இல்லாமல் பதிவு செய்யலாம் ’ என்று தெரிவித்தார்.

 

The post ஒன்றிய அரசு சார்பில் பிறப்பு, இறப்பு பதிவுக்கான மொபைல் செயலி அறிமுகம் appeared first on Dinakaran.

Read Entire Article