ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணி ஆமைவேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் பாதையும் அடைக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம்-பொன்விளைந்தகளத்தூர் இடையே, ரயில்வே கேட் உள்ளது. இந்த பகுதி கிராம மக்கள் பணி நிமித்தமாகவும் பள்ளி, கல்லுாரி, அரசு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு அரசு பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் செல்கின்றனர். அப்போது, ரயில்வே கேட் கடந்து தான் செல்ல வேண்டும். ரயில் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி ஒத்திவாக்கம் ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.