ஒத்திவாக்கம் ரயில்வே மேம்பாலம்: அரைகுறை பணிகளும்... அவதிப்படும் மக்களும்..!

2 hours ago 2

ஒத்​தி​வாக்​கம் ரயில்வே மேம்​பால கட்​டு​மானப் பணி ஆமைவேகத்​தில் நடை​பெற்று வரும் நிலை​யில் பாதை​யும் அடைக்​கப்​பட்​ட​தால் மக்​கள் பெரும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர். அனைத்து பணி​களையும் விரைந்து முடித்து மக்​கள் பயன்​பாட்டுக்கு கொண்​டுவர வேண்​டுமென கோரிக்கை எழுந்​துள்​ளது.

செங்​கல்​பட்டு அடுத்த ஒத்​தி​வாக்​கம்-பொன்​விளைந்​தகளத்​தூர் இடையே, ரயில்வே கேட் உள்​ளது. இந்த பகுதி கிராம மக்​கள் பணி நிமித்​த​மாக​வும் பள்​ளி, கல்​லுாரி, அரசு மருத்​து​வ​மனை உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய தேவைக்​கு அரசு பேருந்​துகள் மற்​றும் பிற வாக​னங்​களில் செல்​கின்​றனர். அப்​போது, ரயில்வே கேட் கடந்து தான் செல்ல வேண்​டும். ரயில் போக்​கு​வரத்து அதி​கரித்து வரும் நிலை​யில், அடிக்​கடி ஒத்​தி​வாக்​கம் ரயில்வே கேட் மூடப்​படு​கிறது. இதனால் சாலை​யில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​வ​தால் மேம்​பாலம் கட்ட வேண்​டும் என கோரிக்கை எழுந்​தது.

Read Entire Article