விழுப்புரம்: வீட்டில் ஒட்டுகேட்பு கருவி பொருத்தப்பட்ட விவகாரத்தில், தனியார் நிறுவன ஆய்வுக்குப் பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய நிறுவனர் ராமதாஸ், “தைலாபுரத்தில் எனது வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டுகேட்புக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து வாங்கப்பட்ட, விலை மதிப்புமிக்க இக்கருவியை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள் என ஆய்வு நடைபெறுகிறது” என்றார்.