ஒட்டன்சத்திரம் அருகே இரு விபத்துகளில் இருவர் பலி

6 months ago 28

 

 

ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரம் அருகே தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி மயிலாத்தாள் (60). இவர் நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே வந்த டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மயிலாத்தாள் உயிரிழந்தார். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தையம் எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (50) இவர் நேற்று முன்தினம் கள்ளிமந்தையம்- தாராபுரம் நான்கு வழிச்சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது அவ்வழியே வந்த கார் இவரது டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வேலுச்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஒட்டன்சத்திரம் அருகே இரு விபத்துகளில் இருவர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article