சென்னை: கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், விமானத்தில் இருமுடி பைகளில், தேங்காய் எடுத்துச் செல்வதற்கு இந்திய விமான நிலைய ஆணையம், அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக, சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து தினமும் கொச்சிக்கு புறப்பாடு விமானங்கள் 8, கொச்சியில் இருந்து சென்னைக்கு வருகை விமானங்கள் 8 என மொத்தம் 16 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சென்னை – பெங்களூரு – கொச்சி இடையே, இணைப்பு விமானங்களாக, தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதோடு, ஞாயிறு தோறும், வாரத்தில் ஒரு நாள் நள்ளிரவு 12.45 மணிக்கு, சென்னை – கொச்சி இடையே நேரடி விமான சேவையும் உள்ளது. இதனால் விமானங்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து, இரவு 9:25 மணி வரையில், 8 புறப்பாடு விமானங்கள் கொச்சிக்கு இயக்கப்படுகின்றன. கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியில் இருந்து இரவு 11.05 மணி வரையில் 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினசரி இணைப்பு விமானங்கள், வாராந்திர நேரடி விமானம் ஆகியவைகளும் கூடுதலாக இயக்கப்படுகின்றன.
The post ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக கொச்சிக்கு கூடுதல் விமானங்கள் appeared first on Dinakaran.