ஐயப்ப சுவாமி குறித்த பாடல்: பா.ரஞ்சித், இசைவாணி மீது புகார்

3 months ago 22

கோவை: ஐயப்ப சுவாமி குறித்து அவதூறாகப் பாடியதாக திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், கானா பாடகி இசைவாணி ஆகியோர் மீது ஐயப்ப பக்தர்கள் சார்பில் மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அனைத்து ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளிடம் அவர்கள் அளித்த புகார் மனுவின் விவரம்: “மக்கள் வணங்கும் முக்கிய கடவுளாக சபரிமலை ஐயப்பன் சுவாமி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

Read Entire Article