மதுரை : கனிம வளக் கொள்ளை குறித்து விசாரித்த ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு) சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு தரவில்லை? என்று மதுரை மாவட்ட நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா?, இல்லையெனில் மத்திய பாதுகாப்பு படைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். சகாயம் சாட்சியம் அளிக்க இன்றும் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வரவில்லை. தனக்கான போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்ட நிலையில் ஆஜராக முடியவில்லை என கூறியிருந்தார்.
The post ஐஏஎஸ் அதிகாரி (ஓய்வு) சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு தரவில்லை? – மதுரை மாவட்ட நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.