ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த ரோகித் சர்மா

3 hours ago 1

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 176 ரன்கள் எடுத்தது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து 177 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 15.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 76 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 68 ரன்னும் எடுத்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக ரோகித் சர்மா அரைசதம் அடிப்பது இது 9-வது முறையாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் ஷிகர் தவான், விராட் கோலி மற்றும் டேவிட் வார்னருடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.


Read Entire Article