ஐ.பி.எல். தகுதி சுற்று 2: மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்

1 day ago 6

அகமதாபாத்,

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட பஞ்சாப் கிங்ஸ் - வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்நிலையில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Read Entire Article