ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஆடிய ஷாட் 'கிரிமினல் குற்றம்' இந்திய முன்னாள் வீரர் விளாசல்

1 day ago 3

மும்பை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

இதில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 184 ரன்னில் அடங்கியது. ஷசாங் சிங்கின் (61 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) அதிரடி வீணானது. 2 விக்கெட் வீழ்த்திய பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருணல் பாண்ட்யா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். பெங்களூரு வீரர் ஷெப்பர்டு வீசிய பந்தில் மோசமான ஷாட் அடித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஆடிய ஷாட் கிரிமினல் குற்றம் என்று இந்திய முன்னாள் வீரரான யோக்ராஜ் சிங் விளாசியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஷாட் ஒரு கிரிமினல் குற்றம். ஸ்ரேயாஸ் செய்தது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அதற்கு அவர் மன்னிப்பு கேட்க முடியாது" என்று கூறினார். 

Read Entire Article