ஐ.பி.எல். 2025: சி.எஸ்.கே. அணியில் இணைந்த ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே

4 hours ago 2

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறது.

இதனையொட்டி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சி முகாமில் நியூசிலாந்து வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே இன்று இணைந்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சென்னை அணி நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Kiwi Band Together #WhistlePodu #Dencoming pic.twitter.com/hkzanxzb04

— Chennai Super Kings (@ChennaiIPL) March 17, 2025

Read Entire Article