ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஒடிசா எப்.சி

1 week ago 4

புவனேஸ்வர்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் ஐதராபாத் அணி ஒரு கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஒடிசா அணி 3 கோல்களை அடித்து அசத்தியது.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி ஒடிசா எப்.சி அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றனது. அதன்படி மாலை 5 மணிக்கு சென்னையில் தொடங்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதுகின்றன.

தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கேரளாவில் தொடங்கும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

Read Entire Article