ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சி.. துறைமுகத்தில் பதுங்கி இருந்த வடமாநில கொள்ளையன் கைது

8 months ago 56
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், பணம் எடுக்கப்படும் ஏ.டி.எம்.இயந்திரத்தின் முன்பகுதியை ஸ்க்ரூ டிரைவர் மற்றும் இரும்பு ராடால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து தலைமறைவான அசாம் மாநில இளைஞரை போலீசார் 8-மணி நேரத்தில் கைது செய்தனர். பீச் ஜங்சன் பகுதியில் செயல்பட்டு வரும் இண்டி கேஷ் ஏ.டி.எம்.மையம் அருகே, ரோந்து பணியில் இருந்த போலீசாரைப் பார்த்து, இளைஞர் ஒருவர் தப்பியோடியுள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் ஏ.டி.எம் மையத்திற்கு சென்று பார்த்த போது, ஏ.டி.எம்.இயந்திரம் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. 
Read Entire Article