ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலுள்ள கிதார் கலைஞர் மோகினி டே கணவரை பிரிவதாக அறிவிப்பு

3 months ago 12

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்குழுவில் கிதார் கலைஞராகப் பணியாற்றும் மோகினி டே என்பவர், விவகாரத்து அறிவிப்பை நேற்று தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அன்பான நண்பர்கள், குடும்பத்தினர், ரசிகர்கள், என்னைப் பின்தொடர்பவர்களுக்கு, நான் என் கணவர் மார்க்கை விட்டு பிரிந்துவிட்டேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசி, மனம் ஒருமித்து இந்த முடிவை எடுத்தோம்.

எனவே, நாங்கள் பிரிந்துவிடுவதே சரி என்ற முடிவுக்கு வந்துள்ளோம். எனினும், தொடர்ந்து இருவரும் சேர்ந்து பணியாற்றுவோம். அது எந்த நேரத்திலும் நிற்காது. நீங்கள் எதையும் தவறாக கணிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானுவின் விவாகரத்து அறிவிப்பு வெளியாகி ஒருநாள் முடிந்துள்ள நிலையில், திடீரென்று ஏ.ஆர்.ரஹ்மான் குழுவில் பணியாற்றும் மோகினி டே தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலுள்ள கிதார் கலைஞர் மோகினி டே கணவரை பிரிவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article