ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தது ஏன்? - மத்திய மந்திரி எல்.முருகன் விளக்கம்

5 hours ago 2

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை மத்திய இணை மந்திரி எல்.முருகன் சந்தித்து பேசினார். அண்மையில் டெல்லியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை நடிகை மீனா சந்தித்தது பேசுபொருளான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் - மத்திய இணை மந்திரி எல்.முருகன் இடையேயான சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அய்யர்கண்டிகையில் ஏ.ஆர்.ரகுமான் பிரமாண்ட ஸ்டுடியோ கட்டியுள்ளார். இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணை மந்திரி எல்.முருகனுக்கு ஏ.ஆர்.ரகுமான் அழைப்பு விடுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்தே மந்திரி எல்.முருகன் அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

இதுகுறித்து மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டுடியோவை ஏ.ஆர்.ரகுமான் கட்டியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை மந்திரி என்ற முறையில் நேரில் சென்று பார்த்தேன். இதில் அரசியல் இல்லை" என்றார்.

Read Entire Article