எஸ்றா சற்குணம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

2 hours ago 3

சென்னை: இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர், கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஈசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்த பேராயர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர். நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் அவருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட தருணங்கள் இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

Read Entire Article