சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பாரதிய பாஷா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய அமைப்பான பாரதிய பாஷா பரிஷத், அகில இந்திய அளவில் சிறந்த இலக்கியவாதிகளை தேர்வுசெய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பாரதிய பாஷா பரிஷத் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது ரூ..1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது. கொல்கத்தாவில் மே மாதம் 1-ம் தேதி நடைபெறும் விழாவில் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது வழங்கப்படும் என்று பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு அறிவித்துள்ளது.