எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணனுக்கு பார​திய பாஷா விருது: முதல்​வர் ஸ்டாலின் வாழ்த்து

1 week ago 4

சென்னை: தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணனுக்கு பார​திய பாஷா விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கொல்​கத்​தாவைச் சேர்ந்த இலக்​கிய அமைப்​பான பார​திய பாஷா பரிஷத், அகில இந்​திய அளவில் சிறந்த இலக்​கிய​வா​தி​களை தேர்​வுசெய்து விருது வழங்கி கவுர​வித்து வரு​கிறது. அந்த வகை​யில் தமிழகத்​தைச் சேர்ந்த எழுத்​தாளர் எஸ்​.​ராமகிருஷ்ணன் பார​திய பாஷா பரிஷத் விருதுக்கு தேர்​வுசெய்​யப்​பட்​டுள்​ளார்.

இந்த விருது ரூ..1 லட்​சம் ரொக்​கப் பரிசு, பாராட்​டுச் சான்​றிதழ் ஆகிய​வற்றை உள்​ளடக்​கியது. கொல்​கத்​தா​வில் மே மாதம் 1-ம் தேதி நடை​பெறும் விழா​வில் எஸ். ​ராமகிருஷ்ணனுக்கு இவ்​விருது வழங்​கப்​படும் என்று பார​திய பாஷா பரிஷத் அமைப்பு அறி​வித்​துள்​ளது.

Read Entire Article