சென்னை: எளிய மக்கள் நலனுக்கான குரலுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி என சு.வெங்கடேசன் எம்.பி. மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் “தங்கக் கடன் பிரச்னையில் நிபந்தனைகளைத் தளர்த்தி ரிசர்வ் வங்கி விதிமுறைகளை வெளியிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும். நகைக்கான ரசீது தேவை இல்லை’ என தெரிவித்திருப்பது எளிய மக்கள் நலனுக்கான குரலுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post எளிய மக்கள் நலனுக்கான குரலுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றி: சு.வெங்கடேசன் எம்.பி. மகிழ்ச்சி appeared first on Dinakaran.