எளம்பலூர் அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா

2 weeks ago 1

பெரம்பலூர், ஜன.24: பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் விழா நேற்று (23ம் தேதி) வியாழக்கிழமைக் காலை நடைபெற்றது. இவ் விழாவிற்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தென்னரசு தலைமை வகித்தார். பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியை மேனகா வரவேற்றார். பள்ளியின் பட்டதாரி உதவி தலைமை ஆசிரியர் பைரவி மற்றும் முதுகலை ஆசிரியர் ராகமஞ்சரி ஆகிய இருவரும் வாழ்த் துரை வழங்கினர்.

விழாவின் சிறப்பு விருந் தினராக சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் வேல்முருகன் கலந்து கொண்டு தமிழின் சிறப் புகள் குறித்தும், தாய் மொழியால் தம் எதிர்கால வாழ்வை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்தும் சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ராம மூர்த்தி நன்றி கூறினார்.

The post எளம்பலூர் அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா appeared first on Dinakaran.

Read Entire Article