ராமநாதபுரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வர மீனவர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தண்டி வந்தாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாகிறது. அண்மை காலமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது மட்டுமல்லாது அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிப்பதை கண்டித்து மீனவர்கள் ராமேஸ்வரத்தில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைக்கு ஒன்றிய அரசு முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்று உண்ணாவிரதம் போராட்டம் நடத்திய மீனவர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டமாக தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனையில் உறுதியான நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் போராட்டங்களை தொடர போவதாக மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
The post எல்லைத் தாண்டியதாகக் கூறி அத்துமீறலில் ஈடுபடும் இலங்கை கடற்படை : தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கணக்கோரி 2வது நாளாக போராட்டம்!! appeared first on Dinakaran.