தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், அவர்களின் படகை பறிமுதல் செய்துமான அட்டூழியங்கள் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மீனவர்கள் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில்,எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் மீனவர்களை மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
The post எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை! appeared first on Dinakaran.