எருது விடும் விழா ரத்து

2 weeks ago 3

போச்சம்பள்ளி, ஜன. 18: போச்சம்பள்ளி அருகே, இருதரப்பினர் மோதல் அபாயத்தால், எருது விடும் விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சப்பள்ளி அருகில் உள்ள அகரம் கிராமத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, எருது விடும் விழா நேற்று முன்தினம் நடைபெற இருந்தது. இதில் முதல் காளையை அவிழ்த்து விடுவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இரு தரப்பினரையும் அழைத்து வருடம் ஒரு முறை மாற்றி எருது விடும் நிகழ்ச்சி நடத்துமாறு பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் எருது விடும் விழா நிறுத்தப்பட்டது. இது குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது. விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post எருது விடும் விழா ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article