எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

6 hours ago 1

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமுல் கந்தசாமி இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 21-ந் தேதி உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய விதி உள்ளது.

ஆனால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாத காலமே இருப்பதால், வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. எனவே, அதுவரை எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாகவே வால்பாறை இருக்கும்.

Read Entire Article