சென்னை: வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது என்னை பாலியல் குற்றவாளி என எப்படி கூறலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமான் தெரிவித்த கருத்துகளை விமர்சித்த திமுக எம்.பி. கனிமொழி “பெண்களை இதைவிட கேவலமாக பேச முடியாது. இதைக்கேட்டுக் கொண்டு அவரது வீட்டிலும், அக்கட்சியிலும் பெண்கள் எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.