
சென்னை,
தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி தொடங்கிய நிலையில், ஜூன் 6-ந்தேதி(இன்று) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-
"தமிழ்நாட்டில் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு 07.05.2025 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. இன்று (06.06.2025) பிற்பகல் 01.00 மணி வரை 2,98,425 மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இதில் 1,33,805 மாணவர்களும், 1,10,363 மாணவிகளும் ஆக மொத்தம் 2,44,168 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். இன்று 06.06.2025 நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்த மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை 09.06.2025 க்குள் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. BARCH படிப்பிற்கான NATA நுழைவுத்தேர்வு ஜுன் இறுதி வாரம் வரை நடைபெற இருப்பதால் BARCH படிப்பிற்கான இணையதள விண்ணப்ப பதிவு மற்றும் சான்றிதழ் பதிவேற்றங்களை 30.06.2025 வரை மேற்கொள்ளலாம்.
HSC துணைத்தேர்வு (Supplementary) முடிவுகள் வெளிவந்தவுடன், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை (TNEA) துணைக்கலந்தாய்வுக்கான Counselling) விண்ணப்ப பதிவு தேதி அறிவிக்கப்படும். (Supplementary
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு அவர்களின் விளையாட்டு சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் மூலம் 02.08.2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பணி 13.06.2025 வரை நடைபெறும். அவர்களுக்கான கால அட்டவணை விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், குறுந்தகவல் மூலமாக ஒவ்வொருவருக்கும் தனியாக அனுப்பபட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின் தமிழ்நாடு முழுவதும் 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேரக்கை சேவை மைய(TFC Centres) நிறுவப்பட்டுள்ளன. அந்த சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம் மற்றும் 1800 425 0110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."
இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.