ஓ.பன்னீர்செல்வம் மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை என்று சட்டப்பேரவை எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்ததாக ஓபிஎஸ் அடிக்கடி கூறிக் கொள்கிறார். 2010-ல் முல்லை பெரியாறு உரிமை போராட்டத்துக்கு அவரை நம்பாமல், என்னை தலைமை வகிக்கச் செய்தார் ஜெயலலிதா. பலமுறை ஓ.பன்னீர்செல்வத்தை வைத்துவிட்டு, அவரது மாவட்டத்துக்கு என்னை அனுப்பினார் ஜெயலலிதா.