சென்னை: மதுரை, சேலம் மண்டலங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தின் 2,002 ஏக்கர் நிலம் எந்தெந்த பகுதிகளில் விடுவிக்கப்படுகிறது என்பதை அரசாணையில் வீட்டுவசதித் துறை தெரிவித்துள்ளது.
தமிழக வீட்டுவசதி வாரியத்தால் ஆர்ஜிதம் செய்ய நோட்டீஸ் தரப்பட்ட நிலங்கள், உரிமையாளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டும் எடுக்கப்படாத நிலங்கள் என தமிழகம் முழுவதும் கண்டறியப்பட்ட 18 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அதில் வசிப்பவர்களுக்கே வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.