ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க முடிவு

4 months ago 13

சென்னை: பதவிக்காலம் முடியவுள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2019 டிசம்பரில் தேர்தல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் ஜன.5ல் நிறைவு பெறுகிறது. பதவிக்காலம் முடிய உள்ள 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள், வார்டுகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. பதவிக்காலம் முடிவடைய உள்ள ஊரக உள்ளாட்சிகளில் சிறப்பு அலுவலர்களை நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

The post ஊராட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article