வருசநாடு, ஏப். 11: தேனி மாவட்டம், க.மயிலாடும்பாறையில் யூனியன் நிர்வாகம் சார்பில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. உரிய முறையில் பராமரிக்கப்படாததால் தற்போது இந்த கட்டிடம் பழுதடைந்துள்ளதுடன், மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவல் தொடர்பாக வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏதேனும் விபரீதம் நிகழும் முன்பு இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து கிராம பொதுமக்கள் சிலர் கூறுகையில், ‘‘ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி இக்கட்டிடத்தை உடனடியாக இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.