ஊத்துக்கோட்டையில் மறைந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி

6 hours ago 3

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினரான பூண்டி ஒன்றியம் திம்ம பூபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மறைந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு இந்திய பார்கவுன்சில் மூலம் ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஊத்துக்கோட்டை வழக்கறிஞர் சங்க அலுவலகத்தில் நடந்தது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் வெற்றி தமிழன் தலைமையில் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் மூத்த வழக்கறிஞர் குணசேகரன் அரசு வழக்கறிஞர் வெஸ்லீ ஆகியோர் இறந்த பிரபாகரனின் வாரிசுதாரரான ரவிச்சந்திரன் என்பவரிடம் சேம நல நிதியாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினர். இதில் வழக்கறிஞர்கள் பார்த்திபன் ராஜசேகரன் வேல்முருகன் ரமேஷ் முனுசாமி வித்யா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

The post ஊத்துக்கோட்டையில் மறைந்த வழக்கறிஞர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி appeared first on Dinakaran.

Read Entire Article