திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதம் ஏற்படும். எனவே, நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.