தமிழகத்தில் அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில், நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புத்தக கட்டுநர் பயிற்சி முடித்த அனைவருக்கும் அரசு வேலை வழங்குதல் உள்பட 6 கோரிக்கைகள் குறித்து, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு சங்க பிரதிநிதிகளால், மார்ச் 17-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.