உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் நவ.14 வரை கனமழை வாய்ப்பு

2 months ago 12

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இம்மாதம் 14-ம் தேதி வரை கனமழை வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில் தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

Read Entire Article