உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை

2 weeks ago 2

 

தேவதானப்பட்டி, ஜன.21: தேவதானப்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மற்றும் வேனை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். தேவதானப்பட்டி பகுதிகளில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களை போலீசார் கண்காணிக்க வேண்டும், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் ஓட்டும் ஆட்டோக்களின் உரிமம் ரத்து செய்ய வேண்டும், அதிக வேகத்துடன் இயக்கும் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நேற்று பெரியகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் போக்குவரத்து போலீசார் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாத ஒரு வேன் மற்றும் ஒரு ஆட்டோவை பறிமுதல் செய்து ஜெயமங்கலம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.

The post உரிய ஆவணங்கள் இன்றி பள்ளி குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனங்கள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article