உத்திரமேரூர் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் தீ

1 day ago 4

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த மல்லியங்கரணை பகுதியில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை கொண்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. இந்நிலையில், தொழிற்சாலையில் இன்று காலை திடீரென தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் மளமளவென தீ பரவி தொழிற்சாலை முழுவதும் எரிய துவங்கியது. இதுகுறித்து தகவலறிந்ததும் உத்திரமேரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீவிபத்தில் தொழிற்சாலைக்குள் நிறுத்திவைத்திருந்த வாகனங்கள் உட்பட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாரேனும் தீயிட்டு எரித்தார்களா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உத்திரமேரூர் அருகே பிளாஸ்டிக் கம்பெனியில் தீ appeared first on Dinakaran.

Read Entire Article